Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் சுற்றித் திரிந்த கழுதைகள் பிடிப்பு

Print PDF
தினமணி         05.03.2013

நகரில் சுற்றித் திரிந்த கழுதைகள் பிடிப்பு

செங்கம் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாகச் சுற்றித் திரிந்த கழுதைகளை பேரூராட்சிப் பணியாளர்கள் பிடித்துக்கொண்டு போய் காட்டில் விட்டனர்.

செங்கம் நகரில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் கழுதைகளை பிடிக்க வேண்டும் என செங்கம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலத் தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்ராஜ் உத்தரவுபடி பேரூராட்சி பணியாளர்கள், துக்காப்பேட்டை, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், பெருமாள்கோவில் தெரு, ராஜவீதி, காய்கனி மண்டி அருகில் சுற்றித் திரிந்த கழுதைகளை பிடித்தனர். பின்னர் அவற்றை பேரூராட்சி லாரியில் ஏற்றிச் சென்று காட்டுப் பகுதியில் விட்டனர்.

நாய், குரங்குகளை பிடிக்க கோரிக்கை: செங்கம் நகரில் நாய் மற்றும் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவற்றையும் பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.