Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.8 லட்சத்தில் பொதுக் கழிப்பறைகள் திறப்பு

Print PDF
தினமணி           08.03.2013

ரூ.8 லட்சத்தில் பொதுக் கழிப்பறைகள் திறப்பு


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்கென ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பறைகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன. திருப்பத்தூர் தென்மாப்பட்டு, பேருந்து நிலையம், வாரச்சந்தை வளாகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு புதன்கிழமை அன்று பேரூராட்சித் தலைவர் ஆர், சோமசுந்தரம் தலைமை வகிக்க மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.

மேலும், இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சங்கர நாராயணன், துப்புரவு ஆய்வாளர் தங்கம், துணைத் தலைவர் சையது, பேரூராட்சி கவுன்சிலர்கள் உதயசண்முகம், பாண்டிமீனாள் சேகர், அங்காள பரமேஸ்வரி நாகராஜன், ஆனந்த் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் மோகன், பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.