Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாம்பரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையா 9884900315க்கு டயல் பண்ணுங்க

Print PDF
தினகரன்                   14.03.2013

தாம்பரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையா 9884900315க்கு டயல் பண்ணுங்க


தாம்பரம்: தாம்பரம் நகராட்சி சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
நகராட்சி பொது நிதி ரூ.10 லட்சத்தில் நாய்களுக்கான அறுவை சிகிச்சை அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும் நகரம் முழுவதும் 3 ஆயிரத்து 371 நாய்கள் இருப்பதாக கணெடுக்கப்பட்டு, இது வரை 1,476 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நாய்களுக்கு ஐந்து வகையான தடுப்பு ஊசிகள் போடப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களின் காதில் அடை யாளம் இடப்படுகிறது.

இதுகுறித்து தாம்பரம் சண்முகம் சாலை, சேலை யூர் கேம்ப் ரோடு ஆகிய இடங்களில் நகரமன்ற தலைவர் கரிகாலன் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், பொதுமக்களுக்கு தெருநாய்கள் குறித்த அச்சம் தேவையில்லை.

தங்கள் பகுதியில் தெருநாய்கள் தொல்லை இருந்தால், 9884900315, 044- 22266206 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

ஒரே நாளில் 121 நாய்கள் பிடிபட்டன

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிதாக 8 நாய் பிடிக்கும் வாகனம் வாங்கப்பட்டு நாய் பிடிக்கும் பணி நடைபெற்றது. கடந்த 11ம் தேதி மட்டும் 121 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 15 மண்டலத்திலும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த மண்டலத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் நாய் பிடிக்கும் வாகனம் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Last Updated on Friday, 15 March 2013 04:57