Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி சிறப்பு முகாம்: 268 பேருக்கு சிறுநீரகப் பரிசோதனை

Print PDF
தினமணி               19.03.2013

மாநகராட்சி சிறப்பு முகாம்: 268 பேருக்கு சிறுநீரகப் பரிசோதனை


சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற முகாமில் 268 பேருக்கு சிறுநீரகப் பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நுங்கம்பாக்கம் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெரம்பூர் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த முகாம்களில் மொத்தம் 268 பேருக்கு சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் மட்டும் 142 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும்.

இந்த முகாமில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் பி. செüந்தரராஜன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் முகாமை பார்வையிட்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.