தினமணி 23.03.2013
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
வால்பாறை பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வால்பாறை டவுன், சிறுவர் பூங்கா, கக்கன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் அவ்வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே தயங்குகின்றனர்.
நாளுக்கு நாள் பெருகும் இவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க, நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி வால்பாறை கால்நடை மருத்துவமனையில் புதன்கிழமை காலை நடைபெற்ற முகாமில், பல்வேறு பகுதிகளில் இருந்து நகராட்சிப் பணியாளர்கள் மூலம் பிடித்து வரப்பட்ட நாய்களுக்கு கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் அறுவை சிகிச்சை செய்தார்.