Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூரில் ஆட்டிறைச்சி என்று கூறி விற்கப்பட்ட 60 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF
தினத்தந்தி            25.03.2013

திருப்பூரில் ஆட்டிறைச்சி என்று கூறி விற்கப்பட்ட 60 கிலோ மாட்டு இறைச்சி பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


திருப்பூரில் ஆட்டி றைச்சி என்று கூறி கலப் படம் செய்து விற்கப் பட்ட 60 கிலோ மாட்டு இறைச்சியை மாநக ராட்சி அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

இறைச்சிக்கடைகளில் ஆய்வு

திருப்பூர் கே.செட்டிபாளை யம் பகுதியில் உள்ள இறைச் சிக்கடைகளில் ஆட்டிறைச்சி யுடன் மாட்டுக்கறியை கலப் படம் செய்து விற்பனை செய்வதாக திருப்பூர் மாநகர சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. மாநகர் நல அதிகாரி செல் வக்குமார் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் முரளிகண்ணன், பிச்சை, முருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கே.செட்டி பாளையத்தில் உள்ள இறைச் சிக்கடைகளில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.

60 கிலோ பறிமுதல்

இந்த ஆய்வில் கறி கடை காரர்கள் மாநகராட்சி சீல் இல்லாமல் இறைச்சி விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித் தனர். மேலும் ஆட்டுக்கறி யுடன் மாட்டுக்கறியை சேர்த்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. கே.செட்டி பாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள இறைச்சிக்கடையில் 20 கிலோ மாட்டுக்கறி, சரவன மகால் கல்யாண மண்டப வீதியில் உள்ள கறிக்கடையில் 40 கிலோ மாட்டு இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆட்டி றைச்சி என்று கூறி மாட்டுக்கறி விற்றதை அதிகாரிகள் பறி முதல் செய்ததால் அந்த பகுதி பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகர நல அதிகாரி செல்வக்குமார் கூறும்போது, ஆட்டு இறைச்சி என்று பொதுமக்களிடம் கூறி மாட்டு இறைச்சியை கலந்து விற்பனை செய்வது குற்றமா கும். பொதுமக்கள் விழிப்புணர் வுடன் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆய்வுகள் தொட ரும் என்றார்.