Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"பிளாஸ்டிக்' விதிமுறைகளை பின்பற்றினால் பயன்

Print PDF
தினமலர்       28.03.2013

"பிளாஸ்டிக்' விதிமுறைகளை பின்பற்றினால் பயன்


ஊட்டி:"தடை செய்யப்பட்ட "பிளாஸ்டிக்' பொருட்களின் விதிமுறைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் கடைபிடித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்' என மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், பிளாஸ்டிக் கேரி பைகளை பயன்படுத்த, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருப்பினும், பல கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் விற்கப்படுவதும், நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ரெய்டு நடத்தி, பறிமுதல் செய்து, அபராதம் விதிப்பதும் வாடிக்கையாக உள்ளது. "கடைக்காரர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் அனுமதிக்கப்பட்டவை தான்' என, பல வியாபாரிகளும், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் கூறி வந்ததால், வியாபாரிகள், நகராட்சி அதிகரிகளுக்கும் இடையே "கருத்து மோதல்' தொடர்ந்து வருகிறது.குழப்பத்திற்கு தீர்வுஇந்நிலையில், பிளாஸ்டிக் கேரி பைகளை பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக, நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், செயலர் ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கை:அனைத்து வகை, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கவர், கப், பிளாஸ்டிக் மூடப்பட்ட காகித தட்டுகளை வியாபாரிகள் பயன்படுத்த கூடாது.விற்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மீது, அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண், 40 மைக்ரான் எடை உள்ளவை என்ற விபரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

இதுகுறித்த விபரங்கள் அடங்கிய பதிவேட்டை, அனைத்து கடை உரிமையாளர்களும் பராமரிக்க வேண்டும்.உள்ளாட்சி அலுவலர்களின் ஆய்வின் போது, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்கப்பட்டால், ஒரு கடையில் முதல் முறை பறிமுதல் செய்யப்படும் ஒவ்வொரு அரை கிலோ பிளாஸ்டிக் பைகளுக்கும் 500 வீதமும், 2ம் முறை, ஒவ்வொரு அரை கிலோவுக்கும் 750 வீதமும், 3வது முறை ஒவ்வொரு அரை கிலோவுக்கும் 1000 ரூபாய் வீதமும் அபராதம் விதிக்கப்படும்.

இதையும் மீறி அக்கடையில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்கப்பட்டால், பயன்படுத்தினால் கடை உரிமம், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பால் ரத்து செய்யப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்பினர் 100 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் கடைகளில், கேரி பைகளை கேட்காமல், வீடுகளில் இருந்தே துணிப் பைகளை எடுத்து வர வேண்டும். இந்த விதிமுறைகளை வியாபாரிகளும், பொதுமக்களும் கடைபிடித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.