Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை வனவிலங்கு அமைப்பினர் அதிரடி நடவடிக்கை

Print PDF
தினமலர்            04.04.2013

பேரூராட்சியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை வனவிலங்கு அமைப்பினர் அதிரடி நடவடிக்கை


ஊத்துக்கோட்டை:பேரூராட்சி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை, சென்னை விலங்குகள் அமைப்பினர் பிடித்து, கருத்தடை செய்து வருகின்றனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், மொத்தம் உள்ள, 15 வார்டுகளில், 5,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, 40க்கும் மேற்பட்ட தெருக்களில், அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன.

கோரிக்கை

மேலும், சொறி நாய்களும், தெருவில் சுற்றி வருவதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து படுகாயம் அடைக்கின்றனர். மேலும், சில நாய்கள் நடந்து செல்லும் மக்களை விரட்டி கடிக்கிறது.

இதையடுத்து, பேரூராட்சியில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம், சென்னை விலங்கு அமைப்பு (புளூ கிராஸ்) நிறுவனத்திற்கு நாய்கள் பிடிக்க வேண்டும் என, பரிந்துரை கடிதம் எழுதினர்.

உறுதி

இதையடுத்து, நேற்று காலை, பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் சென்னை விலங்கு அமைப்பு ஊழியர்கள் ஆகியோர் இணைந்து, ஊத்துக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த, 22 ஆண், 28 பெண் என, 50 நாய்களை விரட்டி பிடித்தனர்.

பிடிபட்ட நாய்களை வேனில் ஏற்றிக் கொண்டு, சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கு நாய்களுக்கு கருத்தடை செய்து, மீண்டும் நாய்களை ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், வேன் மூலம் கொண்டு வந்து விடுவர்.

இதே போல், மீதமுள்ள நாய்களையும் பிடித்து அவற்றிற்கும் கருத்தடை செய்யப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.