Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அண்ணாமலை நகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை

Print PDF
தினமணி       10.04.2013

அண்ணாமலை நகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை


சிதம்பரம் அண்ணாமலைநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

அண்ணாமலைநகர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடித்து சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கு கால்நடை மருத்துவர் ஏ.ஜவகர் தலைமையிலான குழுவினர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.

மேலும் நாய்களுக்கு ரேபீஸ் நோய் தடுப்பூசியும் போடப்பட்டது. இதுவரை 71 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என பேரூராட்சி செயல்அலுவலர் தெரிவித்தார்.