Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அருப்புக்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ஆய்வு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது .

Print PDF

மாலை மலர் 22.09.2009

அருப்புக்கோட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் ஆய்வு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது .

அருப்புக்கோட்டை, செப். 22-

அருப்புக்கோட்டை நகரசபை பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆய்வு கூட்டம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. நகரசபை ஆணையர் முத்துராஜ் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் சிவபிரகாசம், ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அருப்புக்கோட்டை நகரசபை பகுதிகளை பாதாள சாக் கடை திட்டம் பற்றியும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் தாசில்தார் துரைப்பாண்டி, நகரசபை பொறியாளர் கருணாகரன், குடிநீர் வழங்கல் வாரிய பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 22 September 2009 11:50