தினமணி 23.09.2009
குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும்
அரூர், செப். 22: அரூர் நகர மக்கள் குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அரூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.திருஞானம், துப்புரவு ஆய்வாளர் சு.ரவீந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
பலத்த மழையாக இருந்தாலும், அரூர் நகரில் நாள்தோறும் பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் புதிய மழைநீர் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக நோய் தாக்குதல் இருக்கும். எனவே நகர மக்கள் குடிநீரைக் காய்óச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.