தினமணி 23.09.2009
பன்றி காய்ச்சல் தடுப்பு: நாகர்கோவில் நகராட்சி சார்பில் 800 முகமூடிகள் வாங்க திட்டம்
நாகர்கோவில், செப். 22: நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 800 முகமூடிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.25) நடைபெறவுள்ள நகர்மன்ற கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
இதுபோல் பன்றி காய்ச்சல் தொடர்பாக மக்களிடையே உண்டாகும் அச்சத்தை போக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 60 ஆயிரம் துண்டுப் பிரசுரங்களையும், 100 ஸ்டிக்கர்களையும் அச்சிட்டு விநியோகம் செய்யவும் நகராட்சி திட்டமிட்டுள்ளது.