Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Print PDF

தினமணி 24.09.2009

ஹோட்டல்களில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி, செப். 23: சுகாதாரத் துறையினர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஹோட்டல்களில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல்களில் வட்டாட்சியர் ப.அன்பரசன் தலைமையில் நகராட்சி செயல் அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர் மகாலிங்கம், மருத்துவ அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தியாகதுருகத்தில் பேருராட்சி செயல் அலுவலர் பி.பழனி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Last Updated on Thursday, 24 September 2009 06:58