மாலைமலர் 24.09.2009
ரூ. 20 லட்சம் செலவில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் கட்டிட பணி துணை மேயர் தொடங்கி வைத்தார்
கோவை, செப். 24-
கோவை மாநகராட்சி 16-வது வட்டம் பீளமேடு பி.எஸ்.ஜி.வி. நகரில் சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிட பணி தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
மாநகராட்சி துணை மேயர் கார்த்திக் கட்டிட பணியை முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம். சாமி, உதவி பொறியாளர் ஹேமலதா, தொழில் நுட்ப உதவியாளர் தியாகராஜன், சுகாதார ஆய்வாளர் முருகா, தி.மு.க. வட்ட செயலாளர் ஆர்.செல்வராஜ், போர்வாள் ராஜேந்திரன், ஆர். மணிகண்டன், நாராயணன்.
கவுன்சிலர் தன்ராஜ் மற்றும் விஸ்வநாதன், பி.கே. முருகேசன், ராமதாஸ், பூவை ரவி, கமல் மனோகரன், ஏ.எஸ். நடராஜ், எம்.செல்வராஜ், வாசு, எல்.ஜி. தர்மராஜ், கா.சம்பத், சந்திரன், அண்ணா நகர் கருப்புசாமி, ரங்கத்துரை, முருகேசன் மற்றும் வார்டு பொதுமக்கள் ஏராளமானபேர் பங்கேற்றனர்.