Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணித் தொடக்கம்

Print PDF

தினமணி                   19.07.2013

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணித் தொடக்கம்

சத்துவாச்சாரி நேரு நகரில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணியை சட்டப் பேரவை உறுப்பினர் டாக்டர் வி.எஸ்.விஜய் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் .

டெங்கு எதிர்ப்பு மாதத்தையொட்டி, வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில் இப்பணி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மண்டலக் குழுத் தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.