Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம்: தாராபுரம் நகராட்சிக் கூட்டத்தில் தகவல்

Print PDF

தினமணி               01.08.2013 

கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமனம்:  தாராபுரம் நகராட்சிக் கூட்டத்தில் தகவல்

தாராபுரம் நகரில் சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் கூடுதல் துப்புரவு பணியிடங்கள் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளது என ஆணையர் க.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
  • மன்றத்தின் சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர் ஞா.கலாவதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் க. சரவணக்குமார், துணைத் தலைவர் எஸ். கோவிந்தாரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  • கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

 கருப்புசாமி (அதிமுக): சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார பணிகளில் தேக்கநிலை காணப்படுகிறது.

 ஆணையாளர்: நகராட்சியில் புதிய துப்புரவுப் பணியாளர்கள் பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பெயர்கள் விடுபட்டோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

 நாகேஸ்வரன் (அதிமுக): நகராட்சிக்குள்பட்ட 4-வது வார்டு பகுதியில் இதுவரை எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றார்.

  • நகராட்சிக்கு சொந்தமான பல கடைகள் நீண்ட ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் சிலரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருவதாக பல உறுப்பினர்கள் தெரிவித்தனர்.÷இதற்கு பதிலளித்த ஆணையர், கடைகள் மறு ஏலம் விடப்பட உள்ளது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுவரொட்டி ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி அனுமதி பெறாத மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியோருக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க இயலாது என்றார்.