Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டீ தூளில் கலப்படம்: கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Print PDF

தினமணி 29.09.2009

டீ தூளில் கலப்படம்: கடைகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

அரவக்குறிச்சி, செப். 27: கரூர் மாவட்டப் பகுதி கடைகளில் டீத் தூளில் கலப்படத்தைக் கண்டறிய பொது சுகாதாரத் துறையினர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ உத்தரவின் பேரில் கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சதாசிவம் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுதும் உள்ள டீக்கடை, மளிகைக் கடைகளில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பல கடைகளில் போலியான தரமற்ற கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 2 இடங்களில் எடுக்கப்பட்ட டீத்தூள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பல கடைகளில் விற்பனை உரிமம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

ஆய்வின்போது மருத்துவ அலுவலர்கள் டாக்டர் சாந்திக்கண்ணன், டாக்டர் கொளதமன், பாண்டியன் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், உணவு ஆய்வாளர் வீரப்பன், சுகாதார ஆய்வாளர் டைட்டஸ், சிவலிங்கம் ஆகியோர் ஈடுபட்டனர்.

Last Updated on Tuesday, 29 September 2009 06:15