Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினமணி 29.09.2009

காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் அழிப்பு

வத்தலகுண்டு, செப்.28: வத்தலகுண்டில் காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டன.

சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெ. சதீஸ்குமார் வழிகாட்டுதலின் பேரில், துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் அப்துல் பாரி முன்னிலையில், டாக்டர் உமா சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் வேணுகோபால், உணவு ஆய்வாளர் பாண்டியராஜன் ஆகியோர் தேயிலையில் கலப்படம் உள்ளதைக் கண்டறிய திடீர் ஆய்வு நடத்தினர்.

வத்தலகுண்டு முழுவதும் கடைகளிலும், கிட்டங்கிகளிலும் நடத்திய ஆய்வில் ரூ. 2 ஆயிரம் பெறுமான காலாவதியான தேயிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

Last Updated on Tuesday, 29 September 2009 06:21