Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி             04.09.2013

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

 
 
 
 
 
 
 
 
 
திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியை அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பணி

திருச்சி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் உற்பத்தி ஆதாரங்களை அழித்தல் மற்றும் தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பணி நேற்று தொடங்கியது. அரியமங்கலம் கோட்டம் 24–வது வார்டில் பாலக்கரை பிள்ளைமார் தெரு பகுதியில் அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் வீடு, வீடாக சென்று துண்டுபிரசுரம் மற்றும் டெங்கு கொசுவை அழிக்க தேவையான அபேட் மருந்தும் வழங்கினார். இந்த பணி குறித்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி கூறியதாவது:–

60 ஆயிரம் வீடுகள்

மாநகராட்சி முழுவதும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ.அபிஷேகபுரம் ஆகிய 4 கோட்டங்களிலும் தலா 5 சிறப்பு குழுக்கள் வீதம் 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசுப்புழு ஆதாரங்களை அகற்றும் பணி தினமும் ஒவ்வொரு குழுவும் 3 ஆயிரம் வீடுகள் வீதம் நான்கு கோட்டங்களிலும் 60 ஆயிரம் வீடுகளிலும், 3 தினங்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீடுகளில் இப்பணிகள் நடைபெறும்.

மேலும் டெங்கு உருவாக்கும் கொசுக்கள் உற்பத்திக்கான ஆதாரங்களான தேவையற்ற பழைய டயர்கள், ஓடுகள், ஓட்டை உடைசல் பொருட்களை அப்புறப்படுத்தி சாலை ஓரத்தில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. குழுவுடன் ஒரு லாரியும் செல்வதன் மூலம் டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்கள் உடனுக்குடன் லாரியில் ஏற்றப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.

பாத்திரங்கள் பறிமுதல்

நல்ல தண்ணீரை திறந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டாம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

இவற்றை கடைப்பிடிக்காத இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நல்ல தண்ணீர் கீழே கொட்டப்படுவதுடன், பாத்திரங்களும் பறிமுதல் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாநகர மக்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெயா, துணை மேயர் மரியம் ஆசிக், கோட்ட தலைவர் சீனிவாசன், கவுன்சிலர் மகாலட்சுமி மலையப்பன், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 45–வது வார்டு பகுதியில் விநாயகர் நகரில் டெங்கு கொசு விழிப்புணர்வு பணியை கோட்ட தலைவர் ஞானசேகர் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பணியில் கோட்ட உதவி ஆணையர்கள் தயாநிதி, தனபாலன், பாஸ்கரன், ரெங்கராஜன், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அல்லி, உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், கண்ணன், அமுதவள்ளி மற்றும் மாநகராட்சி பணியாளர்கள், கல்லூரி மாணவ–மாணவிகள், சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் கொசு உற்பத்தி ஆதாரங்களை அழித்தனர்.