Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இலவச கொசு வலைகள் முதல்கட்டமாக கூவம் குடிசைவாசிகளுக்கு கிடைக்கும்

Print PDF

தினமலர்                04.09.2013

இலவச கொசு வலைகள் முதல்கட்டமாக கூவம் குடிசைவாசிகளுக்கு கிடைக்கும்


சென்னை:கொசுக் கடியில் இருந்து, பொது­மக்­களை காக்க, மாந­க­ராட்சி சார்பில் அறி­விக்­கப்­பட்ட இல­வச கொசு வலைகள் வழங்கும் திட்­டத்தை, இம்­மாத இறு­திக்குள் செயல்­ப­டுத்த மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது. முதல் கட்­ட­மாக, கூவம் பகு­தியில் வசிப்­போ­ருக்கு வழங்­கப்­பட உள்­ளன.

ஐந்து லட்சம்

சென்­னையில் கொசுக் கடியில் இருந்து பொது­மக்­களை காக்க, நொச்சி செடி வளர்ப்பு மற்றும் இல­வச கொசு வலைகள் என, இரண்டு முக்­கிய திட்­டங்­களை, கடந்த பட்­ஜெட்டில், மேயர் சைதை துரை­சாமி அறி­வித்தார்.
இதில், நொச்சி செடி­க­ளுக்கு, மாந­க­ராட்சி முதல்­முறை ஒப்­பந்தம் கோரிய போது, தனியார் நிறு­வ­னங்கள் அதிக தொகை கோரின. இதனால், இரண்­டா­வது முறை­யாக ஒப்­பந்தம் கோரப்­பட்­டது.

இதன்­படி, தற்­போது, ஐந்து லட்சம் நொச்சி செடிகள் கொள்­முதல் செய்ய மாந­க­ராட்சி ஒப்­பந்த நிறு­வ­னத்தை தேர்வு செய்­துள்­ளது. இம்­மாத இறு­திக்குள், நொச்சி செடிகள் குடிசை பகு­தி­களில் நடவு செய்­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அடுத்­த­தாக இல­வச கொசு­வ­லைகள் வழங்கும் திட்­டத்தில், இந்த கொசு­வ­லைகள் வழங்­கு­வ­தற்­கான தகு­தி­யான பய­னா­ளிகள், மண்­டல வாரி­யாக தேர்வு செய்யும் பணி துவங்­கப்­பட்­டது.

முதல் கட்­ட­மாக, 78 ஆயி­ரத்து, 184 பய­னா­ளிகள் தேர்வு செய்­யப்­பட்டு, 1.17 கோடி ரூபாய் மதிப்பில் கொசு வலைகள் வாங்க மாந­க­ராட்சி ஒப்­பந்தம் கோரி­யது. தற்­போது இந்த கொசு­வ­லைகள் வாங்க தனியார் நிறு­வ­னத்­திற்கு கொள்­முதல் ஆணை வழங்­கப்­பட்டு இருப்­பதால், இம்­மாத இறு­திக்குள் கொசு­வ­லை­களை வினி­யோகம் செய்ய மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது.

முதல்­கட்­ட­மாக கூவம் கரை­யோர பகுதி குடி­சை­க­ளுக்கு கொசு வலைகள் வழங்­கப்­பட உள்­ளன. தொடர்ச்­சி­யாக பல்­வேறு கட்­ட­மாக ஒப்­பந்தம் கோரப்­பட்டு, இந்த ஆண்டு இறு­திக்குள், ஐந்து லட்சம் பயனா­ளி­க­ளுக்கு கொசு வலைகள் வழங்க மாந­க­ராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது.

கட்­டுப்­ப­டுத்த முடியும்

இது குறித்து, சுகா­தார துறை அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

கொசு தொல்­லைக்கு தீர்வாக இம்­மாத இறு­திக்குள் கொசு வலைகள் வழங்­கப்­படும். நொச்சி செடிகள் நடவு செய்யும் பணி­களும் இம்­மாத இறு­திக்குள் துவங்­கப்­படும். அது­மட்­டு­மல்­லாமல் கூடுதல் பணி­யா­ளர்கள், கூடுதல் இயந்தி­ரங்கள் கொசு ஒழிப்பு நட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டுகின்றன.

கொசு மருந்து கைதெ­ளிப் பான் 174, புகை பரப்பும் இயந்திரம் 174 என, புதிய இயந்­தி­ரங்கள் கொள்­முதல் செய்­யப்­பட உள்­ளன. வாடகை வாக­னங்கள் பயன்­ப­டுத்த ஒப்­பந்தம் வெளி­யி­டப்­பட்டு உள்­ளது. இதன் மூலம் கொசு தொல்­லையை கட்­டுப்­ப­டுத்த முடியும். இவ்­வாறு அந்த அதி­காரி கூறினார்.

முதல்­கட்­ட­மாக கூவம் கரையோர பகுதி

குடி­சை­க­ளுக்கு கொசு வலைகள் வழங்­கப்­பட உள்­ளன. தொடர்ச்­சி­யாக பல்­வேறு கட்டமாக ஒப்­பந்தம் கோரப்­பட்டு, இந்த ஆண்டு இறு­திக்குள், ஐந்து லட்சம் பயனா­ளி­க­ளுக்கு கொசுவலைகள் வழங்க மாநகராட்சி திட்­ட­மிட்டு உள்­ளது.