Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலப்பட புகார்: தேநீர் கடைகளில் திடீர் ஆய்வு

Print PDF

தினமணி 30.09.2009

கலப்பட புகார்: தேநீர் கடைகளில் திடீர் ஆய்வு

வேலூர், செப். 29: வேலூர் நகரில் செயல்படும் தேநீர் கடைகளில் தேயிலைகளில் கலப்படம் செய்யப்படுவதாகக் கிடைத்த புகாரையொட்டி, மாநகர சுகாதார அலுவலர் பிரியம்வதா செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

புகாரையொட்டி, மாநகர அலுவலர்களோடு பஸ் நிலையம், லாங்கு பஜார் பகுதிகளில் உள்ள தேநீர் கடைகளில் அவர் ஆய்வு செய்தார்.

தேயிலையில் கலப்படம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா என சோதித்துப் பார்த்தார். கலப்படம் செய்யப்பட்ட தேயிலைத் தூளைப் பறிமுதல் செய்தார். இவ்வாறு கலப்படம் செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Last Updated on Wednesday, 30 September 2009 06:15