Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பகுதிநேர துப்­பு­ரவு பணிக்கு மாந­க­ராட்சி அழைப்பு ஒரு மணி­ நே­ரத்­திற்கு ரூ.40 ஊதியம்

Print PDF

தினமலர்          23.09.2013

பகுதிநேர துப்­பு­ரவு பணிக்கு மாந­க­ராட்சி அழைப்பு ஒரு மணி­ நே­ரத்­திற்கு ரூ.40 ஊதியம்

சென்னை:ஒரு மணி­நேர துப்­பு­ரவு பணிக்கு 40 ரூபாய் சம்­பளம் வழங்க மாந­க­ராட்சி முடிவு செய்­துள்­ளது. இந்த பகுதி நேர துப்­பு­ரவு பணிக்கு 40 வயது வரை உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம் என்று மாந­க­ராட்சி அறி­வித்­துள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி, துப்­பு­ரவு பணியில் சில மாற்­றங்­களை செய்து, புதிய நடை­மு­றை­களை கையாள உள்­ளது.

அதன்­படி துப்­பு­ரவு பணிக்கு விருப்பம் உள்­ள­வர்­களை பகுதி நேர அடிப்­ப­டையில் பயன்­ப­டுத்தி கொள்ள சென்னை மாந­க­ராட்சி முடிவு செய்­து உள்­ளது.

சுவர்ண ஜெயந்தி நகர்ப்­புற வேலை வாய்ப்பு திட்­டத்தில் பதிவு செய்தோர், பதிவு செய்­யாதோர், அண்டை வீட்டு குழுக்கள், சென்னை மாந­க­ராட்­சி­யுடன் இணைக்­கப்­பட்ட பகு­தி­களின் மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்த துப்­பு­ரவு பணிக்கு விண்­ணப்­பிக்­கலாம்.

பகுதி நேர பணி, ஒரு மணி­நேரம் முதல் இரண்டு மணி­நேரம் வரை இருக்கும். ஒரு மணி நேரத்­திற்கு 40 ரூபாய் ஊதியம் வழங்­கப்­படும். பணி செய்த நேரம் கணக்­கி­டப்­பட்டு மாத­மாக சம்­பளம் வழங்­கப்­படும்.

பணிக்கு 18 வயது முதல் 40 வயது வரை ஆண், பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை. விருப்பம் உள்ளோர் தங்­க­ளது புகைப்­ப­டத்­துடன் பெயர், முக­வரி அடங்­கிய விவ­ரங்­களை, திட்ட அலு­வலர், சுவர்ண ஜெயந்தி நகர்ப்­புற வேலை வாய்ப்பு திட்ட அலு­வ­லகம், எண், 2, டாக்டர் பெசன்ட் சாலை, திரு­வல்­லிக்­கேணி, சென்னை 600005 என்ற முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கலாம்.