Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

Print PDF

தினமலர்             24.09.2013

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பேரூராட்சி சேர்மன் ஆதிலட்சுமி கலியமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார், சீதாலட்சுமி ஆதிவராகன் துவக்கப் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவ, மாணவிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக டெங்கு காய்ச்சல் நோய் பரவும் விதம், தடுக்கும் செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இதில் கல்விக்குழுத் தலைவர் கலியமூர்த்தி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி தலைவர் பூமாலை கேசவன், பேரூராட்சி துணைத் தலைவர் சின்னப்பன், லயன்ஸ் கிளப் தலைவர் ஜெயவேல், பொருளாளர் ஜவகர் நாராயணசாமி, மாவட்ட தலைவர் வேல்முருகன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.