Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

278 நாய், பூனைகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி

Print PDF

தினகரன்             01.10.2013

278 நாய், பூனைகளுக்கு ரேபீஸ் தடுப்பூசி

கோவை,: கோவை மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள், பூனைகள் இருப்பதாக தெரிகிறது. ரேபீஸ் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள ரேபீஸ் அறிகுறி தென்பட்ட நாய், பூனைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

இதில் 252 நாய்கள், 26 பூனைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாவட்ட அளவில், நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கால் நடை பராமரிப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிர முயற்சி எடுத்துள்ளது.

கோவை மாவட்டத்தில் 44 பேரூராட்சிகளில் 8,124 நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் நடக்கிறது. மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஆப ரேஷன் நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.