Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ39.73 லட்சத்தில் சீருடை

Print PDF

தினகரன்         23.10.2013

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ39.73 லட்சத்தில் சீருடை

கோவை, : கோவை மாநகராட்சியில் 1600 பெண் துப்புரவு பணியாளர்கள் உள்பட மொத்தம் 3002 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சீருடை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சீருடை வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மேயர் செ.ம.வேலுசாமி, ஆண் துப்புரவு பணியாளர்களுக்கு 2 செட் பேண்ட்-சட்டை, 2 துண்டு, காலணி, பெண் துப்புரவு பணியாளர்களுக்கு 2 செட் புடவை, 2 துண்டு, காலணி ஆகியவற்றை வழங்கினார். இதற்காக, மாநகராட்சி சார்பில் செலவிடப்பட்ட தொகை ரூ.39 லட்சத்து 73 ஆயிரத்து 829. நிகழ்ச்சியில், கமிஷனர்  லதா, துணை மேயர் லீலாவதி, துணை கமிஷனர் சிவராசு, மண்டல தலைவர்கள் ஆதிநாராயணன், ஜெயராம், நிதிக்குழு தலைவர் பிரபாகரன், பணிக்குழு தலைவர் அம்மன் அர்ஜூணன், சுகாதார குழு தலைவர் தாமரைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.