தினகரன் 22.10.2013
சங்ககிரி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
சங்ககிரி, : சங்ககிரி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக ஒருங்கிணைந்த துப்புரவு பணி நடந்தது.
தற்போது நிலவி வரும் மழைக்காலத்தையொட்டி நகர் பகுதிகளில் பயன்பாடில்லாத இடங்களிலும், சாக்கடை நீர் தேங்கும் இடங்களில் புல், பூண்டுகள் அடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனால் மழைக்கால நோய்களான டெங்கு, மலேரியா, டைபாய்டு பொது மக்களை தாக்குகிறது.
இதனால் தடுப்பு நடவடிக்கையாக சங்ககிரி பேரூராட்சி தலைவர் செல்லப்பன் தலைமையில் ஒருங்கிணைந்த துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி நகர் பகுதிகளில் புல் பூண்டுகள் அகற்றுதல், சாக்கடைகளை சுத்தம் செய்து கொசு மருந்து அடித்தல், குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து புகை அடித்தல் ஆகியன பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.