தமிழ் முரசு 31.10.2013
டெங்கு காய்ச்சலை தடுக்க குளோரின் மாத்திரை கலந்து குடிநீர் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தீர்மானம்
புழல்:நாரவாரிகுப்பம் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் விப்ரநாராயணன், நிர்வாக செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 6வது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.காந்தி தெருவில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். அப்துல் வகாப் தெருவில் கால்வாயில் நீர் நிரம்பி வெளியேறுவதால் கால்வாயை உயரமாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் குடிநீரில் குளோரின் மாத்திரை கலந்து குடிநீர் வினியோகிக்கப்படும். சக்திகான் மேஸ்திரி, காசி விஸ்வநாதன் தெரு, நடேசன் தெரு, பெரியார் தெரு ஆகிய தெருக்களை புதுப் பிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.