Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினத்தந்தி      14.11.2013

கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம்

சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணம்பாளையம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா விழிப்புணர்வு பிரசாரம் தலைவர் தளபதி முருகேசன் தலைமையில் நடந்தது. விழிப்புணர்வு பிரசாரத்தில் துண்டு பிரசுரங்களை நேரடியாக வீடு வீடாக சென்று கொடுத்தனர். மேலும் தொட்டிகள், ஆட்டுக்கல்லில் உள்ள அசுத்த நீரினை அகற்றி சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தி மருந்துகளும் தெளிக்கப்பட்டது. அனைத்து வீடுகளிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் சிவக்குமார், செயல் அலுவலர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.