தினகரன் 21.11.2013
லால்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்
லால்குடி,: திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதாராணி விஜயமூர்த்தி தலைமை வகித்தார். செயல் அலுவலர் முத்துகுமார் முன்னிலை வகித்தார்.முகாமில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 15 மற்றும் 16,18 வார்டுகளில் குப்பை அகற்றுதல், சாக்கடை சுத்தம் செய்தல், பொதுக் கழிவறை சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. முகாமில் வார்டு கவுன்சிலர்கள் நிஜாமுதின், மஞ்சுளா செல்வம், நித்தியா கிருஷ்ணமூர்த்தி, ராஜம் காத்தான், கதிரேசன் பேரூராட்சி பணியாளார்கள் கலந்து கொண்டனர்.