தினகரன் 27.11.2013
பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு
கோவை, : கோவை மாவட்டத்தில் 37 பேரூராட்சிகள் உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அனைத்து பேரூராட்சிகளிலும் 40 மைக்ரான் தடிமன் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு போன்றவற்றை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் தடை விதித்தது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி, பேப்பர், சணல் பைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அனை த்து பேரூராட்சிகளிலும் வியாபார கடைக ளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில் ஒரு காகிதப்பை 2 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக பிளாஸ்டிக் பயன்பாடு வழக்கம் போல் அதிகரித்து விட்டது. கேரி பேக் பயன் பாடு அதிகமானதால், பேரூரட்சி பகுதிகளில் சுகாதார கேடு அதிகமாகி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதை தொ டர்ந்து பிளாஸ்டிக் பொரு ட்கள் பயன்பாட்டை முற்றி லும் தடுக்கவேண்டும், அலட்சியம் காட்டக்கூடாது என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் பேரூராட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.