Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்           05.12.2013 

டெங்கு ஒழிக்க டயர்கள் பறிமுதல்

அனுப்பர்பாளையம்,: சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, டெங்கு கொசு ஒழிப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பகுதியில் சாலையோரம் உள்ள இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன பஞ்சர் கடைகளின் முன்புறம் ரோட்டோரமாக சேமித்து வைத்திருக்கும் உபயோகமற்ற பழைய டயர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டன.

இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து இரு சக்கர வாகன டயர்கள் 221, சைக்கிள் டயர்கள்132,  லாரி டயர்கள் 8 உள்பட 361 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அவிநாசி வட்டார தலைமை மருத்துவர் ராமசாமி, சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாலர்கள ரமே ஷ்,செல்வ ராஜ், பரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலதண்டபானி, சுகாதார மேஸ்திரி ரவி மற்றும் பேரூராட்சி சுகாதார பனியாளர்கள் பங்கேற்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உபயோகமற்ற 361டயர்கள் அவிநாசி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன.