தினத்தந்தி 06.12.2013
திமிரியில் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்
வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோர் உத்தரவின்பேரில் திமிரி மற்றும் விளாப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் திமிரி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு திமிரி, விளாப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர்கள் புவனேஸ்வரி, செல்விராமசேகர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மனோகரன், முகம்மத்ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராணிப்பேட்டை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமையில் டாக்டர்கள் தணிகைவேல், லட்சுமணன் ஆகியோர் இந்த கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் 50–க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி உறுப்பினர்கள் கலைச்செல்வி, சுந்தரமூர்த்தி, சாவித்ரி உள்பட பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.