Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெரு நாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினமணி             07.12.2013

தெரு நாய்களுக்கு கருத்தடை

விளாப்பாக்கம் பேரூராட்சியில் தெரு நாய்களுக்கு வியாழக்கிழமை கருத்தடை முகாம் நடத்தப்பட்டது.

முகாமை பேரூராட்சித் தலைவர் என்.செல்வி ராமசேகர் தலைமை தாங்கி துவக்கிவைத்தார். செயல் அலுவலர் யூ.முஹம்மத் ரிஜ்வான் முன்னிலை வகித்தார். இதில் கால்நடை உதவி இயக்குநர் எம்.விஜயகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்தனர். அதேபோல் திமிரி பேரூராட்சியிலும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. இம்முகாமில் திமிரி பேரூராட்சித் தலைவர் புவனேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி, செயல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.