தினமணி 09.12.2013
ராசிபுரம் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசின் சீருடை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், நகராட்சியில் பணிபுரியும் துப்புரவாளர்களுக்கான சீருடைகளை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் வழங்கினார். மொத்தம் 119 பணியாளர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சீருடைகள் துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், நகராட்சி மேலாளர் வே.சண்முகம், துப்புரவு அலுவலர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.