தமிழ் முரசு 28.12.2013
கும்மிடிப்பூண்டியில் 63 நாய்களுக்கு கு.க.
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடந்துசெல்லும் பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று பேரூராட்சி ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் பேரூராட்சியில் 3 வது வார்டில் துவங்கி 13 வார்டுகளில் தெருவில் சுற்றிதிரிந்த நாய்களை பிடித்தனர். இதில் 63 நாய்கள் பிடிபட்டது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் மணிவேல் கூறுகையில், இங்கு பிடிக்கப்பட்டுள்ள நாய்களை மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். தடுப்பூசி போடப்பட்டு ஒரு வாரத்தில் மீண்டும் அதே இடத்தில் நாய்களை விட்டு விடுவோம் என்றார்.