தினமணி 14.01.2014
நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை வழங்கல்
ராஜபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி தலைமை வகித்து இங்கு பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், ஒட்டுநர்கள், மகப்பேறு உதவியாளர்களுக்கு இந்த ஆண்டுக்கான புதிய சீருடைகளை வழங்கிப் பேசினார்.
ராஜபாளையம் நகராட்சி ஆணையர் ராமசாமி, பொறியாளர் நடராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, கவுன்சிலர்கள் விழாவில் பங்கேற்றனர்.