Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெருநாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினகரன்             22.01.2014 

தெருநாய்களுக்கு கருத்தடை

சங்ககிரி, : சங்ககிரியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பேரூராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடித்தனர். சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் வேதமணி முன்னிலையில், சங்ககிரி கால்நடை மருத்துவர் சுரேஷ், பிடிபட்ட நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்தார். இந்த பணியில் சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், எழுத்தர் கணேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குப்பமுத்து, பாலு உட்பட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.