தினமணி 6.11.2009
டீக் கடைகளில் அதிகாரிகள் சோதனை
பவானி, நவ. 5: குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் டீக் கடைகளில் கலப்பட டீத்தூள் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மண்டலத் துணை வட்டாட்சியர் குப்புசாமி தலைமையில் நகராட்சி ஆணையர் முத்து ராமேஸ்வரன், சுகாதார அலுவலர் இளங்கோ உள்ளிட்டோர் இச்சோதனையில் ஈடுபட்டனர் (படம்).
சேலம் ரோடு, எடப்பாடி ரோடு, பள்ளிபாளையம் ரோடு பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரி, குளிர்பான நிலையங்களில் நடத்தப்பட்ட இச்சோதனையில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள், காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.