Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொன்னேரி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு

Print PDF

தினமணி 07.11.2009

பொன்னேரி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிப்பு

பொன்னேரி, நவ. 6: பொன்னேரி பேரூராட்சியில் சாலையோரம் தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை பதம் பார்த்து வருவதாக கடந்த 3-ம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.

இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம், ஹரிஹரன் பஜார், தேரடித் தெரு, புதிய பஸ் நிலையம், தாயுமான் செட்டி தெரு உள்ளிட்ட இடங்களில் புகை தெளிக்கும் இயந்திரம் மூலம் கொசு ஒழிப்பு புகையை புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் தெளித்தனர். மீதமுள்ள தெருக்களிலும் வெள்ளிகிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் கொசு ஒழிப்பு புகையை தெளிக்கவுள்ளனர்.