Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பண்ருட்டி நகரில் தீவிர பராமரிப்புப் பணி

Print PDF

தினமணி 10.11.2009

பண்ருட்டி நகரில் தீவிர பராமரிப்புப் பணி

பண்ருட்டி,நவ. 9: கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை பண்ருட்டி நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு, பராமரிப்புப் பணிகளை தீவிரப்படுத்தினார்.

இடைவிடாத பருவ மழையால் பண்ருட்டி நகரில் பல்வேறு இடத்தில் தண்ணீóர் தேங்கியுள்ளது. நீர் தேங்கிய பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

மழை நீர் தேங்கி நின்ற அம்பேத்கர் நகர், சாமியார் தர்கா, மேலப்பாளையம, திருவதிகை உள்ளிட்ட பல பகுதிகளை நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன் பார்வையிட்டு பணிகளை விரைவுபடுத்தினார். அதிமுக கவுன்சிலர்கள் எம்.எம்.கமலக்கண்ணன், எஸ்.பி.ரமேஷ், கார்த்திக் உடனிருந்தனர்.

Last Updated on Tuesday, 10 November 2009 07:38