தினமணி 11.11.2009
போடி பகுதியில் சுகாதாரக் கேட்டை தடுக்க தடுப்பு மருந்து
போடி, நவ. 10: போடி பகுதியில் நகராட்சி சார்பில் மழையினால் சுகாதாரக் கேடு ஏற்படாமல் தடுக்க தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.
போடி பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் மழையினால் கொட்டகுடி ஆற்றிலிருந்து வரும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் போடி நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நகர் முழுவதிம் தண்ணீர் தேங்கி உள்ளதால் நகராட்சி வார்டுகள் முழுவதும் துப்புரவுப் பணியாளர்கள் கொசு ஒழிப்பு மருந்து, பினாயில் திரவம் தெளித்து வருகின்றனர்.
மேலும் புகையடித்தல் மூலம் கொசுக்களை ஒழிக்க புகை அடிக்கும் பணியும் நடை பெற்று வருகிறது. மேலும் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் கலங்கலாக இருப்பதால் தண்ணீரைக் காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.