தினமணி 19.11.2009
களக்காடு அருகே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆய்வு
களக்காடு, நவ. 18: களக்காடு பகுதியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா முகைதீன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலால் இறந்த பிரீடா எலிசபெத் வீடு களக்காடு அருகேயுள்ள மஞ்சுவிளையில் உள்ளது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா முகைதீன் உள்ளிட்ட சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மஞ்சுவிளை பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் நோய்த் தாக்குதல் குறித்து கேட்டறிந்தனர்.