தினமணி 23.11.2009
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
பவானி, நவ. 22: பவானி நகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் 1250 பேருக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நகராட்சி கிழக்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை பவானி எம்எல்ஏ கே.வீ.ராமநாதன் தொடக்கி வைத்தார். ஜம்பை வட்டார மருத்துவ அலுவலர் டி.மேனகா தலைமையில் மருத்துவக் குழுவினர் 1250 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 80 பேருக்கு ஈசிஜி, 21 பேருக்கு ஸ்கேன், 510 பேருக்கு சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
கர்ப்பபை நோய் பரிசோதனை 53 பேருக்கு செய்யப்பட்டது. இதயம் நோய் அறிகுறிகள் உள்ள 18 பேர் மேல்சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டது.
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் கர்ப்பப்பை நோய் பரிசோதனையும், குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் பல் நோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
நகராட்சி ஆணையர் எஸ்.நெடுஞ்செழியன்,நகர்மன்றத் துணைத் தலைவர் என்.கிருஷ்ணராஜ், உறுப்பினர் கே.ஸ்ரீனிவாசன், சுகாதார ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்