தினமணி 23.11.2009
களம்பூரில் 3500 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி
திருவண்ணாமலை, நவ. 22: போளூர் தாலுகா களம்பூர் பேரூராட்சியில் 3,500 குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டது. 1 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.
களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் மகாலட்சுமி ராதாகிருஷஷ்ணன் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கினார். பேரூர் திமுக செயலர் கேடிஆர்.பழனி, கவுன்சிலர் ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள் ஆறுமுகம்,அண்ணாமலை கலந்து கொண்டனர்.