Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகரில் பன்றி வளர்க்க தடை: ஆணையர்

Print PDF

தினமணி 2.12.2009

நகரில் பன்றி வளர்க்க தடை: ஆணையர்

மதுரை, டிச.1: மதுரை மாநகரில் பன்றி வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகரில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இதைக் கருத்தில்கொண்டு, நகரில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்படுகிறது. மதுரை நகரில் பன்றிகளை வளர்ப்போர் 48 மணி நேரத்துக்குள் மாநகராட்சி எல்லைக்கு அப்பால் பன்றிகளை கொண்டு செல்லுமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பன்றிகளை அப்புறப்படுத்தாவிடில், மாநகராட்சி எல்லைக்குள் சுற்றித்திரியும் பன்றிகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் பன்றி ஒன்றுக்கு அபராதத் தொகையாக ரூ. 500 வீதம் வசூலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.