தினமணி 04.12.2009
அவ்வை நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியை முடிக்க உத்தரவு
புதுச்சேரி. டிச.3: புதுச்சேரி அவ்வை நகர் பகுதியில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித்துறை அமைச்சரும் இத் தொகுயின் எம்எல்ஏவுமான ஷாஜகான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதல் கட்டமாக அவ்வை நகர் முதலாவது, 2-வது, 4-வது மெயின் ரோட்டில் இப் பணிகளைச் சீர் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அவ்வை நகர் நல்வாழ்வு சங்கத் தலைவர் சேஷாத்திரி அமைச்சரிடம் இப் பிரச்னை குறித்து மனு கொடுத்தார்.
அதன் அடிப்படையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சேஷாத்திரி தெரிவித்துள்ளார்.