தினமணி 09.12.2009
சாக்கடையை மூடி கட்டப்பட்ட கழிப்பறைகள் அகற்றம்
பவானி, டிச, 8: குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் சாக்கடையை மூடி கட்டப்பட்டிருந்த கழிப்பறைகளை நகராட்சிப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை இடித்து தள்ளினர்.
சுற்றுப்புற சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டாமல் மனிதக் கழிவுகளை நேரடியாக சாக்கடையில் திறந்து விடக்கூடாது என தெரிவிóத்திருந்தது.
ஆயினும், பல்வேறு பகுதிகளில் சாக்கடைகளில் கழிவுகள் திறந்து விடப்பட்டு வந்தன.
இந்நிலையில், காளியம்மன் கோயில் வீதியில் செப்டிக் டேங்க் இல்லாத வீடுகளை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டேங்க் இல்லாமல் கழிவறைகளிலிருந்து நேரடியாக சாக்கடைக்கு செல்லும் வகரையில் வைக்கப்பட்டிருந்த குழாய்கள் துண்டிக்கப்பட்டு சிமெண்ட் கலவை கொண்டு அடைக்கப்பட்டன.
மேலும், சாக்கடை மீதே கட்டப்பட்டிருந்த கழிவறைகளும் இடித்துத் தள்ளப்பட்டன.
இந்நடவடிக்கையில், குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வே.மணிக்கவாசகம் தலைமையில் பொறியாளர் ரவி, சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.