Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

1,536 சிறார்களுக்கு போலியோ சொட்டு மருந்து

Print PDF

தினமணி 14.12.2009

1,536 சிறார்களுக்கு போலியோ சொட்டு மருந்து

வேலூர்,டிச. 13: வேலூர் மாவட்டத்தில் 1,536 சிறார்களுக்கு போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை புகட்டப்பட்டது.

தாற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளவர்கள் மற்றும் அகதிகளின் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு நவம்பர் 15}ம் தேதி, முதல் தவணையாக சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. 2}ம் தவணை சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

கிராமப் புறங்களில் 91 இடங்களிலும், நகர்ப்புறங்களில் 37 இடங்களிலும், 6 அகதிகள் முகாம்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில், 59 இலங்கை அகதிகள் குழந்தைகள் உள்பட 608 சிறார்களுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டன. திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் 928 சிறார்களுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டன.