Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான மளிகைப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 18.12.2009

காலாவதியான மளிகைப் பொருள்கள் பறிமுதல்

அரூர், டிச.17: அரூர் நகரில் உள்ள பல் பொருள் அங்காடிகளில் காலாவதியான பொருள்களை சுகாதாரத் துறை யினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட இடங்களில் சுகாதாரத் துறை யினர் வணிக நிறு வனங்கள், பல்பொருள் அங்காடிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தயாரிப்பு தேதி, பதிவு எண்கள் இல்லாத மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல கடத்தூர் பேரூராட்சி யிலும் காலாவதியான மளிகை பொருள்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சோதனையில் மருத்துவர் ராஜராஜன், செயல் அலுவலர் ஜெ.திருஞானம், துப்புரவு ஆய்வாளர்கள் ரவீந்திரன், சின்னமாரி, கணேசன், ராஜேந்திரன், சுகாதார மேற்பார்வையாளர் டி.லோகசுப்பிரமணியம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Last Updated on Friday, 18 December 2009 06:28