தினமணி 24.12.2009
ஈ, கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிப்பு
திருப்பூர்,டிச.23: திருப்பூர் 15 வேலம்பாளையம் நகராட்சியில் ஈ மற்றும் கொசுக்களை ஒழிக்க புதிய மருந்து அடிக்கப்படுகிறது. மாவட்டத்திலேயே முதன்முறையாக இங்கு இப்பணி மேற்கொள்ளப்பட்டு ள்ளன.
திருப்பூர் மாநகரில் பனியன் கம்பெனி அதிகளவில் உள்ளதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து நெரிசல், சாலையில் குப்பைகள் தேக்கம் அதிகம் உள்ளது.
சாலையில் தேங்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படுவதை கருத்திற்கொண்டு 15 வேலம்பாளையம் நகராட்சியில் இ.எம் 1 என்ற திறன்மிகு நுண்ணிய கலவை மூலம் ஈ மற்றும் கொசு துர்நாற்றம் போக்கும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.
தயாரிக்கும் முறை: 1 லிட்டர் இ.எம் மருந்து (லிட்டர் விலை ரூ.350), 20 லிட்டர் குளோரின் கலக்காத நீர், 1 கிலோ கருப்பட்டி இந்த மூன்றையும் கலந்துகொண்ட பின் தொடர்ந்து 7 நாட்களுக்கு பிளாஸ்டிக் கேனில் மூடி வைக்க வேண்டும், பிறகு இதிலுள்ள மருந்தில் ஒரு லிட்டர் எடுத்து 50 லிட்டர் தண்ணீரில் கலந்து குப்பையின் மீது தெளிக்க வேண்டும்.
மருந்து அடிப்பதின் பயன்கள்: மருந்து தெளித்த ஒரு வாரத்தில் ஈ, கொசு வராமல் தடுத்துவிடும். மேலும் துர்நாற்றம் முழுவதும் வராது. தேங்கியுள்ள குப்பை மக்கி 3 ல் ஒரு பங்காக குறைந்துவிடும்.